எமது தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது
எமது அமைப்பானது 2001 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது. இத் தளத்தினை நாம் எமது செயற்பாடுகளை வெளிக்கொண்டு வரவும், எம்மை அறிமுகம் செய்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை பெற்றுக் கொள்ளவும், தாயகம் சார்ந்து எடுத்துரைக்குவும் உருவாக்கியிருக்கின்றோம். புலம்பெயர் தமிழ் இளையோர்களின் மத்தியில் சமுதாய உயர்வினையும் தாயகம் சார்ந்த தேடலையும் விதைப்பதே எமது நோக்கம்.
தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ்
மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்!
தமிழீழ விடுதலைக்காக தாயகமண்ணில் ஆரம்பித்த பணியை கடல் கடந்தும் புலம்பெயர் தேசத்திலும் தன்னை அர்ப்பணித்து தலைவனின் வழியில் களமாடிய மாவீரன் கேணல்.
பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள அரசின் கைக்கூலிகளால் பிரான்ஸ் நாட்டில் சுடப்பட்டு வீரச்சாவை தழுவியுள்ளார்.
சிவகுமாரனின் நினைவுகள் சார்ந்த - உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழ் மரபுத் திங்கள்
உலகளாவிய தமிழ் இளையோர் அவை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இளையோர்கள் மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இந்நாளில் தமிழர்கள் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவித்து, புதிய ஆடைகள் அணிந்து, தமது உற்றார் உறவினர்களுக்கு பரிசுகள் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய உலக வாழ் தமிழீழ மக்களே..!
அன்று நல்லூர் வீதியிலே தியாக தீபம் திலீபன் அண்ணா ஆரம்பித்து வைத்த தியாகப் பயணமானது இன்று புலம்பெயர் வாழ் மக்களிடம் குறிப்பாக இளையவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.