கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டமை மாபெரும் குற்றம் என்று இலங்கை அரசு கண்டித்துள்ளது.
மிலிபாண்ட் அங்கு வெளியிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடு என்றும் சீற்றத்துடன் கண்டித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநட்டில் இதனைத் தெரிவித்தார்.