feed-image Feed Entries

செய்திகள்
இல.தமிழர்களுக்காக இப்போதுதான் ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது: பிரான்சிஸ் ஏ போய்ல்

இலங்கைத் தமிழர்களுக்காக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாக இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரான்சிஸ் ஏ போய்ல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர் சூழல் நிலவரங்கள் குறித்த நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்ததைத் தொடர்ந்து, போய்ல் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
சிறீலங்காவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்குழு அமைக்கப்படவில்லை :பான் கீ மூன் Array அச்சிடுக Array
ஐ.நா செயலாளர் நாயகம பான் கீ மூன் அவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகள் மற்றும் போர்குற்றம் தொடர்பாக நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்காது எனவும் அது பான் கீ மூன் அவர்களுக்கே ஆலோசனை வழங்ககும் எனவும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
 
ஓஸ்லோ கோரிக்கை - சிறீலங்கா நிராகரிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை அடிப்படையில் தீர்வு காண்பது என்பது தொடர்பான கோரிக்கை சிறீலங்கா அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
 
தமிழ் சமூகத்துக்கு தமிழீழக் கொள்கையை ஆதரிப்பதற்கான உரிமை உள்ளது: பிரித்தானியா
தமிழீழ கொள்கையினை ஆதரித்து செயற்பட தமிழர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்க கூடாது. மேலும் புலிகளின் தடையினை நீக்க விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு தடுப்புச் சட்டமூலம் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க...
 
சிறீலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் - அமெரிக்கா கவலை
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சிறீங்கா மற்றும் மாலைதீவுக்கான தூதரகத்தின் துணைத்தலைவர் வலரி ப்லவர் அவர்கள் கருத்துதெரிவிக்கையில்:

மேலும் வாசிக்க...
 
சிறிலங்கா இறைமையை அவமதிக்கும் மிலிபாண்ட் - கடும் சீற்றத்தில் இலங்கை அரசாங்கம்

கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டமை மாபெரும் குற்றம் என்று இலங்கை அரசு கண்டித்துள்ளது.

மிலிபாண்ட் அங்கு வெளியிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடு என்றும் சீற்றத்துடன் கண்டித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநட்டில் இதனைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், இலங்கை சுயாதீனமான விசாரணையை நடத்தவேண்டும் என நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார். சுயாதீன விசாரணை கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த வருடம், நாடுகளுக்கு இடையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மதிக்கவேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 
இலங்கையின் போர் குற்ற விசாரணைகளுக்கு மீண்டும் ஐ.நா.சபை வலியுறுத்து

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில்,சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

போரின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைக்கு இணங்கவேண்டும். அத்துடன் இதற்காக சர்வதேச நாடுகளும் உதவ முடியும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க...
 
சிறீலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்தது

சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 
ஐநாசபை முன்பாக தீக்குளித்த ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவர் தீக்குளித்த ஐநாசபை முன்பாக 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது.

மேலும் வாசிக்க...
 
மேலதிகக் ஆக்கங்கள்...
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

JPAGE_CURRENT_OF_TOTAL