சூரியத்தேவனின் தந்தை தேசப்பிதா அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு எம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் தனது கடைசிகாலத்தை தாயகத்தில் வாழ விரும்பினார். ஆனால் சிங்கள இராணுவம் அவரை சிறையில் அடைத்தது காரணம் அவர் எமது தேசியத் தலைவரின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காகவே.
அவரை பார்வையிட எந்த மனித உரிமை அமைப்புக்களையோ அல்லது உறவினர்களையோ இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இச் செயல் சிறிலங்காவின் மனித உரிமை மீறலையே எடுத்துக்காட்டுகின்றது.
இவரை பிரிந்து வாடும் அவரின் துனைவியார், பிள்ளைகள் மற்றும் உறவினர் அனைவருக்கும் சுவிஸ் இளையோர் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.