சைப்பிரஸ் வாழ் இளையோர் சார்ப்பில் “ மாவீரர் நாள் 2009 ” நிகழ்வு 28-11-2009 அன்று நிக்கோசியாவில் அமைந்துள்ள INTERNATIONAL STATE FAIRE எனும் இடத்தில் ஓழுங்குசெய்யப்பட்டு உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் உரை மீள் ஒலிபரப்பலுடன் ஆரம்பமான நிகழ்வு தொடர்ந்து மௌன அகவணக்கம் ஈகைச்சுடரேற்றல் என்று தொடர்ந்து கவிதைகள், பாடல்கள், இசை நடனம், உட்பட முத்தமிழ் கலை நிகழ்வாக தொடர்ந்தது,
இறுதியாக சைப்பிரஸ் வாழ் இளைஞர்களால் தமிழீழத்தின் இன்றைய நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து புலம்பெயர் மக்களின் இன்றைய கட்டாய கடமைகளை வெளிப்படுத்தும் ஒரு கருத்துருவாக்கத்துடன் மேடையேற்றப்பட்ட நாடகத்துடன் இரவு 8.30 க்கு நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
இம்முறை மாவீரர் நாள் சிறப்பு வெளியீடாக “ சந்தனப்பேழை சரித்திரங்கள் ” எனும் எனும் ஒரு மாவீரர்கள் நினைவு புத்தக வெளியீடு மாணவர்களால் வெளியிடப்பட்டது.
காவியங்களாய் வரைந்து போன அந்த சந்தனபேழைகளின் சரித்திரங்களை தாங்கி இந்த புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.