தமிமீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர் துயிலுமில்லப் பாடலுடன் மக்கள் மாவீரர் திருவுருவப் படங்களிற்கு மலர் அஞ்சலி செலுத்தி தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.